நாள் : 02.03.2013 & 03.03.2013
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே எல்லோருக்கும் ஒரே சந்தோசம் தான் . எங்களுக்கும் இந்த விதியில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுக்கும் என்று நான் குறிப்பிட்டது – அரபாத் , இவான் பால் , ராஜா மற்றும் நான். வீக்எண்ட் பிளான் என்று எங்களிடம் ஒன்றும் இல்லை. ஆனால் நாங்கள் நினைத்து பார்க்காத அனைத்தும் நடந்துவிட்டது. சம்பளம் வேறு அப்போது தான் வந்திருநதது . சொல்லவா வேண்டும் எங்கள் சேட்டைகளை…….. 🙂 😀
முதலில் சனிக்கிழமை.
காலையில் இருந்து வெட்டியாக நேரத்தை கழித்து விட்டு மதியம் போனிக்ஸ் மால் போகலாம் என்று கிளம்பி போனோம். எனக்கு ஒரு Headphone வாங்க வேண்டும் என்பது தன பிளான். அனால் நடந்ததோ வேறு. மற்ற மூவரும் எதுவும் வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை . மாலுக்குள் சென்றதும் அங்கு கடைகளை பார்த்ததும் சம்பளம் வந்து விட்டது நினைவுக்கு வந்ததும் அவர்களின் மனம் மாறி விட்டது. ஒரு துணி கடையில் போய் புகுந்து விளையாடி விட்டனர். நான் வழக்கம் போல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் (எதை என்று யாரும் கேட்கக்கூடாது… 😛 😛 ).
எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. Yonex Shuttle Racquet வாங்க வேண்டும் என்று. ஒரு படத்தில் லாட்டிரியில் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி செந்தில் யிடம் “டாய் அந்த ரோடு என்னடா விலை…ஐயையோ நான் இப்போ எதாவது வாங்கியே ஆகணுமே “ என்று சொல்லுவார் . அந்த டயலாக் தான் எனக்கு நியாபகம் வந்தது. சரி அந்த Racquet யை இன்று வாங்கி விடவேண்டும் என்று முடிவு செய்து மாலில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு ஸ்போர்ட்ஸ் கடையில் நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்தேன். அனைத்து purchasegalum முடிந்து வீடு திரும்பினோம்.
அடுத்து ஞாயிற்றுக்கிழமை.
இன்றைக்கும் எந்த ஒரு பிளானும் கிடையாது shuttle விளையாடுவதை தவிர. நாம் நினைப்பது எல்லாம் எங்கே நடக்கின்றது …. திடிரென்று ஒரு ஆசை … வீட்டில் மீன் தொட்டி வைக்க வேண்டும் என்று. சரி வா போகலாம் என்று நாங்கள் நால்வரும் கிளம்பி போய் ஒரு குட்டி மீன் தொட்டியை வாங்கி வந்து வீட்டில் வைத்தோம். இதோ இது தான் அது.
இதோடு முடியவில்லை அன்றைய கதை. அரபாத்து கு ஒரு ஆசை. புது மொபைல் வாங்க வேண்டும் என்று. சரி வா போவோம் என்று கிளம்பி போய் பல கடைகளில் விசாரித்து கடைசியாக HTC Desire X மொபைல் போன் வாங்கி வந்தோம். இதோ அந்த மொபைல்.
இரண்டு நாள். எந்த ஒரு பிளான் இல்லாமல் கையில் இருந்த காசு அனைத்தையும் காலி செய்தாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் BSNL தான் . ஏன் என்று கேட்கின்றிகளா …. ஏன் என்றால் வீட்டில் Broadband எடுக்கவில்லை. இன்டர்நெட் மட்டும் இருந்திருந்தால் நாங்கள் ஏதோ ஒரு படத்தை டவுன்லோட் பண்ணி பார்த்து கொண்டிருந்திர்போம் இல்லை என்றல் வலை பூவில் கிறுக்கி கொண்டிருந்திருப்போம். 😛 😀 🙂
எது எப்படியோ என்றும் இல்லாமல் அந்த இரண்டு நாட்களும் மிக சந்தோசமாக கழிந்தது. 🙂 🙂 🙂 🙂